Tuesday, March 9, 2010

Thursday, March 4, 2010

உன் நினைவில்


"
என்
மனித வாழ்வில்
நிரந்தரம்
என்று எதுவுமில்லை!

உன்
நினைவை தவிர!

கடிதம்


"
கடிதத்தின்
முதல் வரியில்
'அன்புக்குரிய'!

கடைசி வரியில்
'அன்புடன்'!

இடைப்பட்ட வரிகளில்
உன்
'நினைவுகளுடன்'
- ரசிகன்!

இடைவெளி


"
முதல் சந்திப்பில்
இடைவெளி விட்டு
அமர்ந்திருக்கிறோம்!

என்ன பேசுவது
என தெரியாது
இடைவெளியை
நிரப்பிவிடுகிறது மவுனம் !

பாசாங்கு


"
என்னை
பார்க்காதது போல்
பாசாங்கு செய்கிறாய்!

நீ
செல்லவேண்டிய
பேருந்தை
தவறவிட்டபடி!!!

Wednesday, March 3, 2010

நட்பே நட்பே - 5


"
பிரிவு காலத்தில்
உன்னை
கடக்கும்போதெல்லாம்
நீ
என்னை
திரும்பி பார்க்கமாட்டாயா
என்ற
ஏக்கத்திலே
தொடர்கிறது
நம் நட்புப்பயணம்!

நட்பே நட்பே - 4


"
என்
ஊனமுற்ற மனதை
சிறகடிக்க வைக்க
நீ
தானமாய்
கொடுத்தது தான்
இந்த நட்பு!

நட்பே நட்பே - 3


"
உன்
மனதுக்கும்
என் மனதுக்குமான
முரண்பாட்டில்
ஒன்றி போனது தான்
நம் நட்பு!

நட்பே நட்பே - 2


"
உன்னோடு
பழகியதில்
ஒரு
உயிரான
நட்பு மட்டுமல்ல!
ஒரு
நட்பான சூழலும்
நீ தான் தந்தாய்!

நட்பே நட்பே - 1


"
நட்பும் காதலும்
இருக்க வேண்டிய
இடம்
நீ தான் சொன்னாய்..

நட்பு
நம் மீது!
காதல்
நம் நட்பு மீது!

Saturday, February 27, 2010

வெட்கத்தில் மனசு!


"
கூட்டத்தில்
என்
கை பிடித்தபடி
நடை பழகுகிறாய்!

வெட்கத்தில்
ஓரமாய்
தள்ளி நின்று கொண்டது
மனசு!"

வழிகாட்டி!


"
என்
வழி தெரியா
பயணத்தில்...

உன் நினைவுகள்
என்
வழிகாட்டி!"

கவன ஈர்ப்பு தீர்மானங்கள் : 1

கவன ஈர்ப்பு தீர்மானங்கள் - 2

கவன ஈர்ப்பு தீர்மானங்கள்-3

Friday, February 26, 2010

தேவதை


"
ஒரு
பனிப்பொழிவில்

இரு கைகளை
சிறகாய் விரித்து
சிரித்தாயே!

அன்று தான்,

பூமியில்
தேவதைகள் உலவுவதை
உணர்ந்தேன்!
"

காதலி


"
நான்
பொய் சொல்லும்போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே!

அடியே!

உண்மையில்
நீ காதலி தான்!"

அழகி

காதல் பரிசு

இப்படிக்கு காதல்!


"
முதன் முதலாய்
என் கவிதைகளை
ஆராய தொடங்கியவள்!

எல்லா கவிதையும்
காதலையே சுத்துதே!

காதல்னா
உனக்கு ரொம்ப பிடிக்குமா?
யார நினச்சு எழுதின?

என் காதலியை தான்!

அது தெரியும்..
யார் அவ?

என்னவள்!

அழகா இருப்பாளோ?

ஓரளவு சுமாரா!

ஓ.. சரி.. நான் கிளம்பறன்!

ஏன்… என்ன அவசரம்?

உனக்கு தான் என்ன பிடிக்காதே!
அப்புறம் நான் எதுக்கு இங்க?

நான் அப்படி ஏதும் சொல்லலையே!

ஓ.. நீ அத வேற சொல்லனுமா?

சொன்னா தானே தெரியும்!

எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்லுவன்னு!

வேறெப்படி சொல்ல?

எனக்கு இப்போ உண்மை தெரியனும்!

என்ன உண்மை?

உனக்கு என்ன பிடிக்குமா பிடிக்காதா?

பிடிக்காமலா
உன்னை பற்றி கவிதை எழுதுகிறேன்?

வெட்கத்தில்
என் கவிதை தொகுப்புகளாள்
தன் முகம் மறைத்தாள்!

சதுரங்கமாடிய காதல்
ராணியை மீட்ட களிப்பில்
நான்!!!

பயங்கரவாதம்!


"
என்
மனதை மீறி வெளிப்படும்
உன்
ஒவ்வொரு நினைவும்

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!"

புன்னகை பூ :)


"
நான்
பூக்களை தந்தால்
நீ
புன்னகை தருகிறாய்!

நான்
புன்னகை தந்தால்
நீயே
பூத்து விடுகிறாய்!

"